ஜான் பென்னிகுவிக்


தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி,
திண்டுக்கல்மதுரை,சிவகங்கைஇராமநாதபுரம்
ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும்,
குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு
 அணையைக் கட்டியஆங்கிலேயப் பொறியாளர்
ஜான் பென்னிகுவிக்  (John Pennycuick சென்னைமாகாண சட்டமன்றத்தின்
உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.



ஜான் பென்னிகுவிக் சென்னை அரசுப்பொறியாளர்


           ஜான் பென்னி குவிக் சென்னை அரசின் பொதுப்பணித்துறைப்பொறியாளர்    
மற்றும் செயலாளராக 1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10அன்றிலிருந்து நியமிக்கப்பட்ட
செய்தி இலண்டன் அரசுப் பதிவிதழில் (திஇலண்டன் கெசட்வெளியிடப்பட்டது 
இதன்படி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்இராணுவப்பணிப் பொறியாளராக
இந்தியாவிற்குப் பணிக்கு வந்தார்.


ஜான் பென்னிகுவிக் அணை கட்ட சொத்தைவிற்றவர்



    நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்பெரியாறு அணைகட்டப்படுவதற்கு முன்,
சென்னை மாகாணத்தில்வைகை வடிநிலப்பரப்பில் பலமுறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டதுஇதனால்பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்இதனை கண்ட பென்னிகுவிக்மிகவும் வருத்தம் அடைந்தார்மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர்பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன்குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பிவிட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்றுதிட்டமிட்டார்இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்துஅனுமதி பெற்றார்எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம்ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின்கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள்தொடங்கினஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில்பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியைமேற்கொண்டதுஅடர்ந்த காடுவிஷப்பூச்சிகள்காட்டு யானைகள்காட்டுமிருகங்கள்கடும் மழைதிடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும்பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதிகட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவானவெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டதுஅதன் பிறகு இந்தத்திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல்பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள்அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்துசொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.  இதனால்தேனிதிண்டுக்கல்மதுரைசிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதிநிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் மணிமண்டபம்




முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும்வகையில் தேனி மாவட்டம்கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடுமின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார்ரூ.1 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச் சிலையுடனானமணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.  என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த மணிமண்டபம் ரூபாய் 1.25 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதுஇந்த மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஜனவரி 15, 2013 அன்று திறந்து வைத்தார்.

Comments