முல்லைப் பெரியாறு அணை







(Mullaperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கிகேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.  இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளதுஇது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் ,அணை தமிழகத்திற்கும் உரியதுதமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைபராமரித்து வருகிறது..  1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும்.  இந்த அணையின்நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளதுஇதன் கீழ்பாசனத்தில்இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைசுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில்கட்டப்பட்ட அணை ஆகும்மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பிவிவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு 'பெரியாறுதிட்டத்தின்கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர்அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிகையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர்நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணைஎன்றழைக்கப்பட்ட  இவ்வணைமுல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும்சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்துமுல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது

Comments